You are hereராமலக்ஷ்மி
ராமலக்ஷ்மி
உயிர்க்கூடு - ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி
உயிர்க் கூடு
மலை உச்சியில்
தனித்து நின்ற மரத்தருகே
இன்னொரு மரமாகி நின்றிருந்தான்
மாலைக் கதிரவனின் பொன்னொளியில்
குளித்துக் கொண்டிருந்தன
மரத்தின் பலநூறு இலைகள்.
நன்றி மறக்கும் உறவுகள்
வஞ்சிக்கும் நட்புகள்
ஏமாற்றும் சுற்றங்கள்
எவருடனும் ஒட்ட இயலாமல்
அவன்
காலப் போக்கில்
உதிரப் போகும் இலைகளை
முறித்துக் கொள்ளும்
சாத்தியம் கொண்ட கிளைகளை
கனிந்ததும் கழன்றிடக்
காத்திருக்கும் பழங்களை
உயிர்க் கூட்டில் பாதுகாத்து
மரம்
மனம் அலை பாயச்
சிலையாக நின்றிருந்தான்
தூறல்
எப்போதும்
சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும்
காலைஉணவை மறந்ததில் வந்த
களைப்பானாலும்
காய்ச்சலில் கிடக்கும் குழந்தையின்
நினைப்பானாலும்
காரணமேயின்றி மேலாளர்
சீறினாலும்
வாடிக்கையாளர் வரம்புமீறிப்
பேசினாலும்
வாட்டமிலா
சற்றுங்கோணா
முகங்காட்ட வேண்டும்
இயந்திரத்தனமாய் இன்றி
சிந்தும் புன்னகை
இயல்பாய் இருந்து தொலைக்க
தூங்கும் போது கனவில் சுமந்தும்
போகுமிடமெங்கும் ஏந்தித் திரிந்தும்
பழக வேண்டும்
தசைகளை
இழுத்துத் தைத்துக் கொண்டால்
தேவலாமெனும் சிந்தனை
தந்த சிரிப்புடன் கிளம்பிய
ஒரு காலையில்..
திசைமாறி வீசிய பருவக்காற்று
திரட்டி வந்த கருமேகங்கள்
தூறலைப் பெரிய பெரிய பொட்டாகச்
சாலையில் எட்டி எட்டிப் போட

